/* */

செங்கல்பட்டு மேம்பாலத்தின்கீழ் ஆண் சடலம் கண்டெடுப்பு

செங்கல்பட்டு மேம்பாலத்தின் கீழ் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மேம்பாலத்தின்கீழ் ஆண் சடலம் கண்டெடுப்பு
X

பாலத்தின் அடியில் கண்டெடுக்கப்ட்ட சடலம்.

செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள பழைய மேம்பாலத்தின் கீழ் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற தாலுகா காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இறந்த நபர் வேலூர் மாவட்டம் சோளிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த திருமலை (வயது45 ). அவர் அதே பகுதியில் வாட்டர் கேன் விநியோகம் செய்யும் வேலை பார்த்துவந்தது தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவதாகவும் நேற்று மாலை மனைவியிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும், இன்று காலை செங்கல்பட்டு பழைய மேம்பாலத்திற்கு கீழே பிணமாக கண்டெடுக்கப்பட்டதாக தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் திருமலை தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 July 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  9. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்