Begin typing your search above and press return to search.
கொரொனா முடங்கிய செங்கல்பட்டு நகரபகுதி...
கொரொனா தாக்கம்
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனாவில் இரண்டாவது அலை கடந்த சில நாட்களாக அதிக உயர்ந்து வருகிறது. இதன் காராணமாக உயிரிழப்புகளும் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சி சார்பில் கொரொனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பகுதிகளை முழுமையாக தடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரொனாவின் தாக்கம் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகாளான சின்ன மணியக்கார தெரு, அண்ணா சாலை, அண்ணாநகர், நத்தம், அளகேசன் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் முழுமையாக அடைக்கப்பட்டு ௨௪ மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது கொரொனா நோயாளிகள் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.