/* */

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் அடித்துக் கொலை

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் அடித்துக் கொலை
X

கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் பகுதியில் வசித்து வருபவர் டில்லி. இவர் இதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருபவர் ராஜேஷ் (வயது 22). இவர் கடந்த சில மாதங்களாகவே அச்சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாலை கடைக்குச் சென்று வந்த சிறுமியை ராஜேஷ் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சிறுமி அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த அவரது தந்தை டில்லி வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கியதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து சிறுமியின் தந்தை டில்லி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் அறிந்த செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 15 Jun 2021 3:13 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...