Begin typing your search above and press return to search.
கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் முன்பு தமிழக அரசு கோவில்களை திறக்கக் கோரி இந்து முன்னணி இயக்கத்தினர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் இரா. பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சின்ன கவி சீராம ஜெயம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், சதீஷ்குமார், விநாயகம், அருள் தீனதயாளன், பிரகாஷ், விக்னேஷ், ஏழுமலை, செந்தில், சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.