Begin typing your search above and press return to search.
ஊதிய உயர்வு வழங்கிட வலியுறுத்தி பி.எம்.டபள்யூ ஊழியர்கள் போராட்டம்
மகேந்திரா சிட்டியில் இயங்கிவரும் பி.எம்.டபள்யூ தொழிற்சாலையில் பல மாதங்களாக ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திராசிட்டியில் இயங்கிவரும் பிரபல பி.எம்.டபள்யூ தனியார் கார் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 17 மாதங்களாக ஊதிய உயர்வு தரப்படவில்லை என கூறி ஊழியர்கள் ஆலை முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறைந்த பணியாளர்களை வைத்து அதிக கார் உற்பத்தி செய்ய கட்டாயப்படுத்தவதாகவும், ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் ஊழியர்களிடம் நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்தைக்கு அழைக்கவில்லை என கூறி 200-க்கும் மேற்பட்டோர் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.