/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய எஸ்பியாக அரவிந்தன் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய எஸ்பியாக பி.அரவிந்தன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய எஸ்பியாக அரவிந்தன் பொறுப்பேற்பு
X

செங்கல்பட்டு புதிய எஸ்பி அரவிந்தன். 

செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக சென்னை சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பி அரவிந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு புதிய மாவட்டம் துவங்கி கடந்த 29ம் தேதியோடு 2 ஆண்டுகள் நிறைவடைந்தன. மாவட்டத்தின் முதல் எஸ்பியாக கண்ணன் நியமிக்கப்பட்டார். அவர் பெண் எஸ்பிக்கு தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கி, ஒரு வருடத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதன்பிறகு, சுந்தரவதனம் எஸ்பியாக நியமிக்கப்பட்டார். 100 நாட்கள் மட்டுமே பொறுப்பில் இருந்த அவர், சென்னை மாதவரம் துணை கமிஷனராக மாற்றப்பட்டார். இதையடுத்து, திருப்பத்தூர் எஸ்பியாக இருந்த பி.விஜயக்குமார் கடந்த 6 மாத்துக்கு முன் செங்கல்பட்டு எஸ்பியாக நியமிக்கப்பட்டார். தற்போது அவர், பணியிடம் மாற்றப்பட்டு, அரவிந்தன் நியமிக்கப்பட்டு இன்று காலை எஸ்.பி அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்ட 2 வருடத்தில் 4 எஸ்பிக்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  4. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  5. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  6. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  7. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  9. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  10. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...