தொடர் மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 100% நிரம்பிய 31 ஏரிகள்
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது அதன்படி கடந்த மூன்று தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில விவசாய பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக, மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் உள்ளன. இதில் 31 ஏரிகள் 100% நிரம்பி உள்ளது.75 சதவீதத்துக்கு மேல் 32 ஏரிகளும், 50 சதவீதத்திற்கு மேல் 91 ஏரிகளும் 25 சதவீதத்திற்கு மேல் 135 ஏரிகளும், 25 சதவிகிதத்துக்கும் கீழ் 239 ஏரிகள் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது