/* */

செந்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா

செந்துறையில்மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் முனைவர் மணிரத்தினம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்கள் வழங்கினார்

HIGHLIGHTS

செந்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா
X

செந்துறையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் முனைவர் கே.ஐ. மணிரத்தினம்

அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

தெற்கு வட்டார தலைவர் இராஜேந்திரன் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ், துளார் கொளஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலையில், மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் முனைவர் கே.ஐ. மணிரத்தினம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், மக்கள் வருமானமின்றி, வேலையின்றி தவித்து வரும் நிலையில், மத்திய அரசு மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி கொடுமை படுத்திவருகிறது. கேஸ், பெட்ரோல், டீசல் விலையை உயர்தியும், சாலை வரி, வங்கி கடன் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலையை முடக்கியும் ஏழை மக்களை துன்புறுத்தி வருகிறது. இதை எல்லாம் சரி செய்து ஏழை நடுத்தர மக்கள் மகிழ்ச்சியாக வாழவைக்க காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு வட்டார தலைவர் மணிகண்டன், SC/ST வட்டார தலைவர் குழுமுர் காமராஜ், மாரிமுத்து, தொழிற்சங்க தலைவர் பாக்கியராஜ், உஞ்சினி தியாகராஜன். கீழமாளிகை கணேசன், இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ராஜா,மகிளா காங்கிரஸ் தலைவி பழனியம்மாள்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கராசு, நக்கம்பாடி கந்தசாமி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 9 May 2022 9:30 AM GMT

Related News