Begin typing your search above and press return to search.
திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க குறைதீர்க்கும் சிறப்பு முகாம்
அரியலூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான குறைதீர்க்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சம்மந்தப்பட்ட அரியலூர், உடையார்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
இதில் திருநங்கைகள் மட்டும் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் தொடர்பான கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், குறிப்பாக புதிய மின்னனு குடும்ப அட்டை பெறுதல், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் குடும்பஅட்டை வகைமாற்றம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு தங்கள் தேவைகளைப் பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.