உடையார்பாளையம் அருகே பாலியல் வன்முறை: குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை
உடையார்பாளையம் அருகே பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே அய்யாதுரை மகன் செல்வகுமார் (36) என்பவர், கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், விறகு பொறுக்கி கொண்டுihருந்த வாய் பேச முடியாத, காது கேட்காத பெண்ணை வழிமறித்து பலவந்தமாக கட்டாயப்படுத்தி பாலியல் வன்தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து யாரிடமும் கூறினாள் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதன்பின் பல முறை மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த பெண்ணின் தாயார் 2019 ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து காவல்துறை விசாரணை செய்ததில் எதிரி செல்வகுமார் என்பவர் வலுக்கட்டாயமாக பாலியல் வன்தாக்குதல் ஈடுபட்டுள்ளார் என்பதனை அரியலூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கவிதா (பொறுப்பு) தகுந்த ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளுடன் சமர்ப்பித்தனர்.
இதனடிப்படையில் 15.07.2022 இன்று அரியலூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் அவர்கள் குற்றவாளி செல்வகுமாருக்கு வாழ் நாள் சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.