/* */

அரியலூர்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி கஞ்சா மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கையில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த மாதம் 4 ம்தேதி பயிற்சி காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்பொழுது ஜெயங்கொண்டம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில், உடையார்பாளையம் கைக்கள நாட்டார் தெருவை சேர்ந்த வினோத், ஜெயங்கொண்டம் கிழக்கு தெருவை சேர்ந்த பிரபாகரன், ஆகிய இளைஞர்கள் கீழகுடியிருப்பு தனியார் மண்டபத்திற்கு பின்புறத்தில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து மூன்று நபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 18,180 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.




விசாரணை செய்ததில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த அருண்குமார், என்பவர் கஞ்ச விநியோகம் செய்ததாக கூறியதையடுத்து அவரை கடந்த மாதம் 10 தேதி கைது செய்தனர் காவல்துறையினர். இந்நிலையில் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மேலும் வெளியே இருந்தால் போதைப்பொருள் விற்பதன் மூலம் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதால் நான்கு நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Updated On: 6 Jan 2022 9:54 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு