Begin typing your search above and press return to search.
அரியலூரில் அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
அரியலூர் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்துத்தரக் கோரி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் நகரில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்துத்தரக் கோரி அங்கு வசிக்கும் மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அரியலூர் ஜெயலலிதா நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு போதிய குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், முறையாக குப்பைகள் அல்லாமல் தேங்கி கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு வசிக்கும் மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதேபோல், திருமானூர் அடுத்த வெற்றியூர் கிராமத்தில் 15 மேற்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.