/* */

திருமானூரில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது; பொட்டலங்கள் பறிமுதல்

திருமானூரில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார், 200 கிராம் மதிப்பு கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருமானூரில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது; பொட்டலங்கள் பறிமுதல்
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டம், திருமானூரில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருமானூர் காவல்நிலைய எஸ்ஐ செந்தில்நாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, திருமானூர் கால்நடை மருந்தகம் அருகே இருந்த மூன்று பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஒட முயற்சித்துள்ளனர். அவர்களை மடக்கிபிடித்து விசாரித்தபோது, அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, கஞ்சா விற்பனை செய்த அம்பேத்கர் நகரை சேர்ந்த கணேஷ்குமார், மணிகண்டன், ஏலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 200 கிராம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 31 July 2021 5:04 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...