பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி விலக வேண்டும்: தொல்.திருமா
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி விலக வேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூரில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தாழ்ந்த ஜாதி என்ற கேள்விக்கு அதில் உள்ள 4 பதில்களில் எந்த ஜாதியை குறிப்பிடுகிறது என்ற பிரச்சனை இல்லை. ஆனால் தாழ்ந்த ஜாதி இன்னும் இருக்கிறது என்ற கருத்தை மாணவர்களிடம் தினிக்கிறார்கள். நினைவு படுத்துகிறார்கள் என்றால் இது அப்பட்டமான ஜாதி வெறியர்களின் இழிவு செயல் அதுவும் பெரியார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் கேள்வி என்பது திட்டமிட்டே இடம் பெற செய்துள்ளனர்.
இதற்கு பெறுப்போற்று துணை வேந்தர் பதவி விலகவேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய போக்கு தமிழகத்தில் தலை எடுப்பது நாகரீகம் இல்லை என கூறினார். தமிழக ஆளுநர் செயல் ஆர்.எஸ்.எஸ்.ரவி மாநில அரசுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதை விட ஒட்டு மொத்த தேசத்திற்க்கு எதிராக செயல்படுகிறார். இந்த போக்கு கண்டிக்கதக்கது. இலங்கையில் சிங்கலர்கள் ராஜபக்சே குடும்பத்தை விரட்டி அடித்தது போல இந்தியாவில் பா.ஜ.க வை இந்து சமூகம் விரட்டி அடிக்கும் காலம் வரும் என கூறினார்.