அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (04.07.2022) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 318 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் ஆகிய தினங்களில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற 11 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலைகளையும், மாவட்ட அளவில் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு கேடயத்தினையும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத்திட்ட அலுவலர் சிவக்குமார், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.