அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 351 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 351 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சென்னையில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "சர்வதேச சதுரங்கப் போட்டி, நம்ம செஸ் நம்ம பெருமை, 28 ஜூலை முதல் 10 ஆகஸ்ட் வரை, மாவட்ட நிர்வாகம் அரியலூர்" ஆகிய விழிப்புணர்வு வாசகங்கங்கள் அடங்கிய சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மஞ்சப்பையினை பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.