அரியலூரில் புதிய பஸ் சேவை:அமைச்சர் சிவசங்கர் தொடக்கம்
அரியலூர் மாவட்டத்தில் புதிய பஸ் சேவையை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
தமிழக முதலமைச்சர் பெண்களின் நலன் காக்கும் வகையில் நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அறிவித்ததை தொடர்ந்து கூலிவேலை, வணிக நிறுவனங்களில் பணியாற்றி வரும் பெண்கள் அனைவரும் தற்போது நகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். மேலும் பொதுமக்களின் வசதிக்காக புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கீழராயம்புரம் வழியாக அரியலூர் - செந்துறை வழித்தடத்தில் புதிய பஸ் சேவையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து துவைக்கி வைத்தார். இந்த சேவையானது அரியலூரிலிருந்து ஆனந்தவாடி, கீழராயம்புரம் மற்றும் ஆதிகுடிகாடு வழியாக செந்துறை இடையே நாள் ஒன்றுக்கு காலை 2 முறையும், மாலை 2 முறையும் என 4 முறை இயக்கப்பட உள்ளது.
இந்த சேவையினை பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் சிறப்பான முறையில் இயக்கிட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், அரசு போக்குவரத்து கழக கோட்டமேலாளர் ராமநாதன், கிளைமேலாளர் செந்தில்குமார், வட்டாட்சியர் குமரய்யா கலந்துகொண்டனர்.