Begin typing your search above and press return to search.
அரியலூர் அருகே நூதன முறையில் மணல் கடத்திய லாரி பறிமுதல்
அரியலூர் அருகே கொள்ளிடக்கரையில் இருந்து பல மூட்டைகளில் மணல் கடத்தி வந்த லாரியை திருமானூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் திருமானூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் தலைமையிலான போலீசார் காரைபாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது, அதில் கொள்ளிடக்கரையில் இருந்து பல மூட்டைகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மணல் மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே போலீசாரை கண்டதும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.