அரியலூர் கலெக்டருக்கு நவரத்தின மாலை அணிவித்து நரிக்குறவர்கள் கோரிக்கை
அரியலூர் மாவட்ட கலெக்டருக்கு நவரத்தின மாலை அணிவித்த நரிக்குறவர்கள், இலவச பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் நகருக்கு அருகே ராவுத்தன்பட்டி கிராமத்தில் குருவிகாரன் காலனி என்ற இடத்தில் கடந்த 50 ஆண்டுகளாக நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி, அரியலூர் பேருந்து நிலையத்தில் ஊசி, பாசி மணி விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்தின் விலாசத்திலேயே வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு, பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகள் உள்ளன.
ஆனால் இவர்கள் வசிக்கும் இடம் அரசுபுறம்போக்கில் உள்ளது. அந்த இடத்தில் தங்களுக்கு இலவச வீட்டுமணை பட்டா வழங்க வேண்டும் என பலமுறைகோரிக்கை வைத்துள்ளனர். இதுவரை வீட்டுமனைப்பட்ட கிடைக்கவில்லை.
எனவே மீண்டும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நரிக்குறவர்கள், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதிக்கு நவரத்தின மாலை அணிவித்து, தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
தங்களுக்கு அதே இடத்திலோ அல்லது மாற்றுஇடம் தேர்வு செய்தோ, இலவச வீட்டுமனைப் பட்ட வழங்க வேண்டும் என நரிக்குறவர்கள் கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.