Begin typing your search above and press return to search.
திருமானூர் அருகே தாயை கொலை செய்த மகன் கைது
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே தாயை கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த கணேசன் மனைவி சரஸ்வதி(71). இவருக்கும் இவரது மகன் ரவிச்சந்திரனுக்கும்(45) குடும்பத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த ரவிச்சந்திரனுக்கும், அவரது தாய் சரஸ்வதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் அரிவாளால் சரஸ்வதியை வெட்டியுள்ளார். இதில், அதே இடத்தில் சரஸ்வதி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கீழப்பழூவூர் போலீஸார், சரஸ்வதி உடலை கைப்பற்றி அரியலூர் மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.