ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள் வழங்கப்பட்டது
ஐசிஐசிஐ பவுண்டேசன்சார்பில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 2 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள், 20 சுவாச ஓட்ட மீட்டர்கள் ஆகிய மருத்துவ உபகரணங்களை வழங்கினார்கள்.
HIGHLIGHTS
தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் அனைவரும் தங்களால் இயன்ற வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராலமாக நன்கொடை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கிட கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், ஐசிஐசிஐ பவுண்டேசன் மற்றும் ஐசிஐசிஐ வங்கி அரியலூர் கிளை சார்பில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 02 எண்ணிக்கையிலான ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள் மற்றும் 20 எண்ணிக்கையில் சுவாச ஓட்டமீட்டர்கள் (Flow Meter) ஆகிய மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதியிடம் வழங்கினார்கள்.
இக்கருவி மூலம் ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நபர்களின் சிகிச்சைக்காக சிலிண்டர் இல்லாமல் காற்றிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து, நோயாளிகளுக்கு வழங்க முடியும் என்பது குறிப்பிடதக்கது. மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் பிற உதவி தேவைப்படும் நபர்களின் வசதிகளுக்காக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் இதுபோன்ற தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும் எனவும், இந்த ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளை வழங்கிய அமைப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், ஐசிஐசிஐ வங்கி மண்டல மேலாளர்கள் இம்தியாஸ், ராஜேந்திரன், வேலுசாமி, ஜெகநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.