Begin typing your search above and press return to search.
ஜெயங்கொண்டம் அருகே அரசு பஸ் சக்கரம் ஏறி பிளஸ்- 2 மாணவனுக்கு கால் முறிவு
ஜெயங்கொண்டம் அருகே அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த +2 மாணவரின் காலில் பஸ் சக்கரம் ஏறியதால் எலும்பு முறிந்தது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குருவாலப்பர் கோயில் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்குமார்.+2 மாணவர். இவர் பள்ளிக்கு செல்ல அரசு பஸ்சில் கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியவாறு வந்துள்ளார்.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் சிதம்பரம் ரோட்டில் வட்டாட்சியர் குடியிருப்பு அருகே வந்தபோது கை நழுவி படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் பஸ் சக்கரம் ஏறி கால் முறிந்தது. இதனை தொடர்ந்து மாணவர் ராஜ்குமார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.