Begin typing your search above and press return to search.
மாதம் 10 ஆயிரம் நிவாரணம் நாடக நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கை
அரியலூர் மாவட்ட நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் கூட்டமைப்பினர் மாதம் 10 ஆயிரம் நிவாரணம் வழங்ககோரி ஆர்ப்பாட்டம்
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாதம் 10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் காக்க கலை நிகழ்வுகள் நடத்திட தமிழக அரசு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் உடன் கூடிய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் தளர்வுகள் ஏற்படுத்த இயலாத நிலையில் மாதம் 10 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழகஅரசு உத்திரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரினர். ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.