126 பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு
126 பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரியலுார் மாவட்டத்திலுள்ள அரசு உயர் . மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு ,ஊராட்சி ஒன்றிய தொடக்க , நடுநிலைப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்கள் , சத்துணவு மையங்கள் , அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றை இடிப்பதற்கு அரியலுார் மாவட்ட கலெக்டரால் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் 2021 ஆம் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஊராட்சி ஒன்றிய தொடக்க .நடுநிலைப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்கள் , சத்துணவு மையங்கள் , அங்கன்வாடி மையங்கள் 196 கட்டிடங்களும், அரசு உயர் .மேல்நிலைப் பள்ளிகளில் 24 கட்டிடங்கள் . கழிவறைகளும் இடிக்கப்பட்டுள்ளது.
மேலும் 17.12.2021 அன்று பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் நடைப்பெற்ற காணொலி காட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக மீதம் இடிக்கப்பட வேண்டிய ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்கள் / சத்துணவு மையங்கள் / அங்கன்வாடி மையங்கள் 98 கட்டிடங்களையும் அரசு உயர்மேல்நிலைப் பள்ளிகளில் 28 கட்டிடங்கள் / கழிவறைகளையும் இடிப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.