சிறப்பு முகாமில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள், பணியாளர்கள் மருத்துவ குழுவின் சான்றிதழ் பெற்று பணிக்கு வரவேண்டும்
HIGHLIGHTS
தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள், பணியாளர்கள் மருத்துவ குழுவின் சான்றிதழ் பெற்று பணிக்கு வரவேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட தகவல்: அரியலூர் சுகாதார பகுதி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தோற்று தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில், நோயினை கட்டுப்படுத்தும் பொருட்டு, அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள், இன்றும் நாளையும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடைபெறும் சிறப்பு மருத்துவ குழு முகாமில் கலந்துகொண்டு, தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்ளவேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவ குழுவின் சான்றிதழ் பெற்று பணிக்கு வரவேண்டும். மேலும், தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், கூடுதல் தடுப்பு நடவடிக்கைகளுடன் இருக்கவேண்டும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.