செந்துறை காவல்நிலையத்தில் மன்னார்குடி ஜீயர் மீது புகார்
செந்துறை காவல் நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பில் மன்னார்குடி ஜீயர் மீது புகார் அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் செந்துறை காவல்நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பில், அக்கட்சியின் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் புகார் மனு ஒன்றை நேற்று அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு சப்பரத்திருவிழாவில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல கடந்த 4-ம் தேதி களிமேடு வந்த மன்னார்குடி மடாதிபதி ஜீயர் ராமானுஜர், தருமை ஆதீன பட்டிணபிரவேசம் என்னும் பல்லாக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு கோட்டாச்சியர் தடை உத்தரவு பிறப்பித்ததை தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால் தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடமாட முடியாது என மிரட்டல் விடும் தோணியிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
எனவே, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், அமைதி ஏற்படவும், மன்னார்குடி மடாதிபதி ஜீயர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனு அளிக்கும் போது, திராவிடர் கழக பொருப்பாளர்கள் பலரும் உடனிருந்தனர்.