அரியலூரில் தானியியங்கி எந்திரத்தின் மூலம் உடனடி புதிய வாக்காளர் அடையாள அட்டை
தானியியங்கி அச்சிடும் எந்திரத்தின் மூலமாக உடனடியாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையினை பெற்று பயன்பெற கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
தானியியங்கி எந்திரத்தின் மூலம் உடனடி புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அல்லது http://www.nvsp.in என்ற இணையத்தள முகவரியின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் உரிய விசாரணை அலுவலரால் தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, விண்ணப்பமானது ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு, விண்ணப்ப படிவத்தில் அளித்துள்ள விண்ணப்பதாரரின் கைபேசிக்குகுறியீட்டு எண்ணானது (QR-CODE) அனுப்பப்படும்.
அவ்வாறு குறியீட்டு எண் கிடைக்கப்பெற்ற பின்பு, அக்குறியீட்டு எண்ணை அரியலூர் மாவட்ட ஆட்சியரக தேர்தல் பிரிவில் இயங்கும் மாவட்ட தொடர்பு மையம் / வாக்காளர் உதவி மையத்தில் காண்பித்து (District Contact Centre) தானியியங்கி அச்சிடும் எந்திரத்தின் (Kiosk Machine) மூலமாக உடனடியாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையினை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.