அரியலூர் எம்எல்ஏவுடன் அமைச்சர் சிவசங்கர் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை
அரியலூர் எம்எல்ஏவுடன் அமைச்சர் சிவசங்கர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்திற்கு முதன்முறையாக அமைச்சாராக பொறுப்பேற்ற பிறகு வருகைதந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். -
தமிழக முதலமைச்சாராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர்நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் பொருப்பேற்றுக் கொண்டார். அமைச்சராக பொருப்பேற்ற பிறகு முதன்முறையாக அரியலூர் மாவட்டத்திற்கு அமைச்சர் சிவசங்கர் நேற்று மாலை வருகைதந்தார்.
பின்னர் அரியலூர் நீதிமன்றம் தெருவில் உள்ள அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பாவின் அலுவலகத்திற்கு வருகைதந்த அமைச்சர் சிவசங்கரை சாலைவை அணிவித்து எம்எல்ஏ வரவேற்றார்.
இதனையடுத்து அமைச்சர் சிவசங்கர் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்துதல் குறித்து எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், மக்களின் குறைகள், நிவாரணத்தொகை மற்றும் நிவாரணப்பணிகள் ஆகியவை குறித்து எம்எல்ஏவிடம் கேட்டறிந்தார்.
பொதுமக்களிடம் தடுப்பூசி போடுவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். ஓரிரு நாட்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏவிடம் அமைச்சர் உறுதியளித்தார்.