அரியலூரில் இரண்டு மருந்து கடைகள் தற்காலிக விற்பனை ரத்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை
அரியலூரில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்த மருந்துக்கடைகள் மீது கலெக்டர் ரத்னா நடவடிக்கை எடுத்தார்.
HIGHLIGHTS
மருத்துவரின் பரிந்துரை மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யும் மருந்துக்கடைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ரத்னா தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940-ன்படி மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது. மேலும் மருந்துகளுக்கான முறையான விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்யக்கூடாது.
இதனை மீறி மருந்துகளை விற்பனை செய்த வாரியங்காவல் அர்ஜீன் மெடிக்கல்ஸ், அங்கராயநல்லூரில் ஏ.வி.எஸ் மெடிக்கல் உள்ளிட்ட மருந்து கடைகளின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, மருந்து கடைகளில் பேராசிட்டமல், ஆன்டி கோல்டு மருந்துகள் மற்றும் ஆன்டிபயோடிக்ஸ், மற்ற பெயின்கில்லர்ஸ் மருந்துகள் எதுவும் மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.