Begin typing your search above and press return to search.
அரியலூரில் கொரோனா நிவாரண நிதி வழங்கியவருக்கு பாராட்டு
அரியலூரில் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கியவரை கலெக்டர் பாராட்டினார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் த.ரத்னாவிடம், ராஜேந்திரபிரசாத் என்பவர் ரூ.16,000/ம், ஏ.கே. சமூக நல அறக்கட்டளை சார்பில் 1 கிலோ துணி பவுடர் 30 பாக்கெட், 300 துணி சோப்புகளும் வழங்கப்பட்டது. நிவாரண நிதிக்கு நிதி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கிய நபர்களை மாவட்ட கலெக்டர் த.ரத்னா பாராட்டினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை கலந்துகொண்டனர்.