அரியலூர்: கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி
அரியலூர் மாவட்டத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க அதனை தொடர்ந்து அனைத்து துறை அரசு அலுவலர்கள் பின் தொடர்ந்து கூறி கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றைப் போற்றி வளர்க்கவும்,மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறுவிளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்துப் போராடவும், நாம் உறுதி கூறுகிறோம். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் அனைத்துறை அலுவலர்களும் உடனிருந்தனர்.