/* */

அரியலூர் அருகே 8அடி உயரமுள்ள பெருமாள் கற்சிலை கண்டெடுப்பு

கரையான்குறிச்சி கிராமத்தில் வீடுகட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 8அடி உயரமுள்ள பெருமாள் கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் அருகே 8அடி உயரமுள்ள பெருமாள் கற்சிலை கண்டெடுப்பு
X

அரியலூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள பெருமாள் கற்சிலை 

அரியலூர் மாவட்டம் கரையான்குறிச்சி கிராமத்தில் வீடுகட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 8அடி உயரமுள்ள பெருமாள் கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.


அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கரையான்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் ஏலாக்குறிச்சியில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்துள்ளார். தனக்கு சொந்தமான 3சென்ட் இடத்தில் வீடு கட்டுவதற்காக, கடந்த இரண்டு தினங்களாக அஸ்திவாரம் தோண்டி வருகின்றார். 4அடி பள்ளம் தோண்டியபோது, கற்சிலை போன்று தென்பட்டதையடுத்து அதனை மேலே எடுக்கும் முயற்சியில் அப்பகுதி மக்கள் முற்பட்டனர். சுமார் 8அடி நீளத்தில் சிலை இருந்ததால் பொதுமக்களால் மேலே எடுக்க முடியவில்லை.


இது குறித்து அரியலூர் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணில் புதையுண்டு இருந்த சிலையானது மேலே எடுக்கப்பட்டதில், அது பெருமாள் சிலை என தெரிய வந்தது. அப்போது கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தா, கோவிந்தா, எனக் கூறி இறைவனை வழிபட்டனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சிலையை சுத்தம் செய்து மாலையிட்டு தீபாராதனை காட்டினார். மேலும் சிலையானது முழுமையாக மேலே எடுக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.


சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் கோட்டாட்சியர் ஏழுமலையிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. இச்சிலை திருச்சியிலுள்ள அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாகவும், தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரின் ஆராய்ச்சிக்குப் பின்னரே, கற்சிலை எந்த காலத்தை ஒட்டியது என்பது குறித்து தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

Updated On: 23 Jun 2021 1:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!