Begin typing your search above and press return to search.
மழையின் காரணமாக 1588 ஹெக்டர் பருத்தி பயிர் முழுமையாக சேதம்
அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 1588.18 ஹெக்டர் பரப்பளவில் பருத்தி பயிர் முழுமையாக சேதமடைந்துள்ளது
HIGHLIGHTS
வடகிழக்கு பருவமழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பயிர் செய்யப்பட்டிருந்த 217.55 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிரும், 56.68 ஹெக்டேர் பரப்பளவில் சோளம், கம்பு பயிர்களும், 14.24 ஹெக்டேர் பரப்பளவில் பருப்பு வகை பயிர்களும், 1588.18 ஹெக்டோர் பரப்பளவில் பருத்தி பயிரும் முழுமையாக சேதமடைந்துள்ளன.
மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக 524 ஹெக்டேர் நெற்பயிரும், 80 ஹெக்டேர் சோளம், கம்பு பயிர்களும், 301 ஹெக்டேர் பருப்பு வகை பயிர்களும், 6 ஹெக்டேர் கரும்பு பயிர்களும், 7.40 ஹெக்டேர் எண்ணெய்வித்து பயிர்களும், 4003 ஹெக்டேர் பருத்தி பயிர்களும் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் வடிவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, மழை பெய்து வருவதால் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது