திருவண்ணாமலை அருகே திருமண ஆசை காட்டி சிறுமி கடத்தல், 3 வாலிபர்களை மடக்கி பிடித்த உறவினர்கள்

திருவண்ணாமலை அருகே திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தி வந்த 3 வாலிபர்களை பஸ் நிலையத்தில் உறவினர்களே சுற்றி வளைத்து பிடித்தனர்.

Update: 2021-07-29 09:31 GMT

திருவண்ணாமலை அருகே சிறுமி கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர்கள்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும், அந்தப் பகுதியில் பழக்கடை நடத்தி வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபரும் காதலிப்பதாக பழகி வந்து உள்ளனர்.

பின்னர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை அவர் தன்னுடன் வருமாறு அழைத்து உள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் வேலூர் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த அவரது நண்பர்கள் 2 பேருடன் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதனையடுத்து அதிகாலையில் சிறுமியை அவரது வீட்டிலிருந்து கடத்தி கொண்டு அவர்கள் 3 பேரும் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர்.

இதனை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியை தேடிய அவரது பெற்றோர்கள் அவர் மாயமாகி விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உறவினர்களுடன் காரில் திருவண்ணாமலைக்கு வந்தனர். பஸ் நிலையத்தில் இருந்த சிறுமி மற்றும் அந்த 3 வாலிபர்களையும் அவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். 

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் சிறுமி காணாமல் போனது தொடர்பாக அவரது பெற்றோர், மரக்காணம் அருகில் உள்ள பிரம்மதேசம் போலீசில் புகார் செய்து தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் பிரம்மதேச போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

Tags:    

Similar News