சொத்தை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் மூதாட்டி மனு

ஏமாற்றி எழுதி வாங்கி கொண்ட தனது சொத்தை மீட்டு தர வேண்டும் கலெக்டரிடம் மூதாட்டி மனு அளித்துள்ளார்

Update: 2021-12-03 07:22 GMT

சொத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த மூதாட்டி

திருவண்ணாமலை தாலுகா நல்லவன்பாளையம் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம். இவரின் மனைவி சிந்தாமணி (வயது 85). பஞ்சாட்சரம் 1994-ம் ஆண்டு இறந்து விட்டார். இவருக்கு சொந்தமாக சமுத்திரம் கிராமத்தில் 1152 சதுரடி காலிமனை மற்றும் அதில் 10-க்கு 10 அளவில் ஓட்டு வீடு உள்ளது.

இந்நிலையில், அவரது கணவரின் உறவினர் மகள், அடிக்கடி அவர் வீட்டிற்கு வந்து செல்வார். அதனை பயன்படுத்தி வாரிசு சான்றிதழில் தனது பெயரை சேர்ந்துள்ளார். 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி லோன் வாங்கி தருகிறேன் எனக்கூறி மூதாட்டி சிந்தாமணியை அழைத்து சென்று சொத்தை தானசெட்டில்மெண்டாக அவரின் மகன் பெயருக்கு எழுதி வாங்கி கொண்டார். இந்த விஷயங்கள் மூதாட்டி சிந்தாமணிக்கு தெரியாமலேயே நடந்துள்ளது.

இந்த நிலையில் அவர், கணவர் மற்றும் மகனுடன் வந்து இது தங்களுடைய இடம் என்றுகூறி காலி செய்ய கூறியுள்ளனர். மேலும் , கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். 

இது குறித்து கலெக்டரிடம் மனு அளிக்க வந்த மூதாட்டி, தனது இடத்தை அபகரித்து, இடத்தை எழுதி வாங்கிய அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சொத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார், 

மனுவை பெற்று கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்

Tags:    

Similar News