திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகளை முன்னிட்டு மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-14 13:31 GMT

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட இடங்களில் மின்தடை மேற்கொள்வது வழக்கம்.

அந்தவகையில் நாளை (ஜூன் 15) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின்தடை செய்யப்படும் ஊர்களின் விவரம் பின் வருமாறு.

செய்யாறு

செய்யாறு மின் கோட்டம் சிறுங்கட்டூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செய்யாறு, திருவத்திபுரம், பெருங்கட்டூர், வாழ்குடை, பெரும்பள்ளம், செங்காடு, கொருக்கை, ராந்தம் மற்றும் பல்லி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

வந்தவாசி

வந்தவாசி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வந்தவாசி, கீழ்கொடுங்காலூர், தெள்ளார், புரிசை, மாம்பட்டு, நல்லூர், சத்தியவாடி ஆகிய துணை மின்நிலையங்களை சார்ந்த கிராமங்களில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

ஆரணி

ஆரணி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆரணி டவுன், ஆரணி சைதாப்பேட்டை, அருணகிரி சத்திரம், ராட்டினமங்கலம் இ.பி.நகர், கொசப்பாளையம், இரும்பேடு, எஸ்.வி.நகரம், வெள்ளேரி, வெட்டியாந்தொழுவம், அரியப்பாடி, குன்னத்தூர், மலையாம்பட்டு, முள்ளிப்பட்டு, ஹவுசிங் போர்டு, பாலம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு, தேவிகாபுரம், தச்சாம்பாடி, அப்பேடு ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நெடுங்குணம், மேல்வில்லிவலம், வேப்பம்பட்டு, கோணாமங்கலம், வெளுகம்பட்டு, மேல்நந்தியம்பாடி, மருத்துவம்பாடி, இடையான்குளத்தூர், நம்பேடு, கரிப்பூர், தத்தனூர், பரிதிபுரம், கெங்கைசூடாமணி, உலகம்பட்டு, அப்பேடு, கூடுவாம்பூண்டி, பெரவளுர், மொடையூர் ஆத்ததுரை, தும்பூர், ஓதலவாடி, ஊத்தூர், கிழக்குமேடு, கோத்தந்தவாடி, ராஜுமாபுரம், செவரப்பூண்டி, தேவிமங்கலம் ஆகிய ஊர்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

போளூர், கலசபாக்கம்

போளூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை போளூர் நகரம், அத்திமூர், ஜடாதாரி குப்பம், கலசபாக்கம், பெலாசூர், வாட்டர்ஒர்க்ஸ், கொம்மனந்தல், முருகாப்பாடி, மண்டகொளத்தூர், ராந்தம் மற்றும் போளூர் நகரை சுற்றியுள்ள கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை துணை மின்நிலையத்தில் நாளை (ஜூன் 15) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கைநம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, வடஅரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென்அரசம்பட்டு, வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதேபோன்று தாமரைநகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் கிராமங்களிலும் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநாயகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News