கல்லூரி மாணவர் 'போக்சோ'வில் கைது

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய, கல்லூரி மாணவர் ‘போக்சோ’வில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-28 02:11 GMT

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய, கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

'போக்சோ' சட்டத்தில் வாலிபர் கைது

வெம்பாக்கம் தாலுாகா, மதுரா பைரவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 19). இவர், பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். பிரசன்னாவுக்கும், 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி ,உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவிக்கு வயிற்றுவலி அதிகமாக பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பரிசோதனை செய்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்தனர்.

கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

காவேரியாம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் அன்புமூர்த்தி. இவரது மகன் அமுதவருஷன் (வயது 14). 10-ம் வகுப்பு மாணவன். நண்பர்களுடன், சமுத்திரம் ஏரி அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக கிணற்றின் நீரில் மூழ்கி சேற்றில் சிக்கினார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் திருவண்ணாமலை தாலுாகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, கிணற்றில் இறங்கி சடலத்தை மீட்டனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News