அரசு பெண் ஊழியரிடம் கத்தியை காட்டி 12 பவுன் நகை பறிப்பு

செய்யாறில் அரசு பெண் ஊழியரிடம் கத்தியை காட்டி 12 பவுன் நகையை பறித்து சென்றனர்.

Update: 2022-08-04 13:05 GMT

பைல் படம்.

செய்யாறு டவுன் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தழகு. இவர் ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர் ஆவார். இவரது மனைவி வாசுகி (வயது 55). இவர், செய்யாறில் உள்ள சுகாதார மாவட்ட துணை இயக்குனர் அலுவலகத்தில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார்.

இவர்,  பணி முடிந்ததும் மாலை தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். ஆரணி சாலையில் நேரு நகர் பகுதியில் உள்ள கோவில் அருகே சென்ற போது அவரை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி வாசுகி கழுத்தில் இருந்த 12 சவரன் தாலி சரடு மற்றும் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஆரணி சாலையில் சென்று மாயமாய் மறைந்தனர்.

இந்த வழிப்பறி சம்பவம் குறித்து செய்யாறு போலீசில் வாசுகி புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News