பெரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

பெரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-06-06 09:30 GMT

ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயிலில் தீ மிதித்த பக்தர்கள்.

ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் பெரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் தீ மிதி திருவிழா முதல் நாளான கடந்த 26 - தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இரண்டாவது நாளான 27 - தேதி பக்காசூரன் வதம், இதை தொடர்ந்து மூன்றாவது நாள் திருக்கல்யாணம், நான்காம் நாள் நச்சி குழியாகம், ஐந்தாம் நாள் அரக்கு மாங்கோட்டை , ஆறாவது நாள் அர்ஜுனன் தபசு, ஏழாவது நாள் தர்மராஜா வீதியுலா, எட்டாவது நாள் மாடுபிடி சண்டை , 9 - ம் நாள் துரியோதனன் படுகளம்,

10 - வது நாளான நேற்று மாலை லச்சிவாக்கம் செங்காளம்மன் கோயிலிலிருந்து உற்சவரான திரவுபதி அம்மன் டிராக்டரில் ஊர்வலமாக வயல் வெளிகளில் இறங்கி பெரம்பூர் கிராமத்தில் தீ மிதிக்கும் இடத்திற்கு வந்தது , உடன் காப்பு கட்டி மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் 110 பேர் அம்மனுடன் ஊர்வலமாக வந்து தீ மிதித்தனர். கடைசி நாளான இன்று அரவான் இறுதி சடங்கு நிகழ்ச்சியுடன் கொடி இறக்கப்பட்டு விழா முடிந்தது.

Similar News