திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை

திருநின்றவூர் அருகே ஜிம் பயிற்சியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-04-28 08:13 GMT

திருநின்றவூர் அருகே ஜிம் பயிற்சியாளர் விஷ மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம். ஆவடி அடுத்த திருநின்றவூர் நத்தமேடு ஊராட்சி குமரன் தெருவில் வசித்து வந்தவர் கணேஷ். இளைஞரைான இவர்  ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு மழை நீர் வீட்டிற்குள் புகுந்ததால் அந்த இடத்தில் இருந்து லட்சுமி திரையரங்கம் அருகில் வாடகை வீட்டில் தனது தாய் அலமேலு தனது சகோதரர் ரோகித் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இவர் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் வேலைக்கு சென்று அவ்வப்போது சந்தித்து பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வழக்கம் போல் ஜிம்மை திறப்பதற்காக சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரது சகோதரர் ரோகித் ஜிம்மில் உள்ளவர்களுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது ஏற்கெனவே சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.உடனே சந்தேகம் அடைந்த ரோகித் அவர்களது பழைய வீட்டில் சென்று பார்த்தபோது கணேஷ் வாயில் நுறை வெளியேறி மயங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கணேஷ் உடலை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.இது தொடர்பாக திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கணேஷ் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இயல்பாக சுற்றி திரிந்த வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை.

Tags:    

Similar News