தீபாவளிக்கு முந்தைய வாரச்சந்தை: பொருட்களை வாங்க குவிந்த மக்கள்

தேனியில் தீபாவளிக்கு முந்தைய வாரச்சந்தை என்பதால் நேற்று சந்தை களைகட்டி இருந்தது.

Update: 2021-10-31 02:00 GMT

தேனியில் நேற்று கூடிய வாரச்சந்தையில் இரவு நேரமும் விற்பனை களைகட்டி இருந்தது.

தேனி வாரச்சந்தை பொள்ளாச்சி வாரச்சந்தையை அடுத்து தமிழகத்தின் இரண்டாவது வாரச்சந்தையாக இருந்து வருகிறது. மேலும் தீபாவளிக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் சந்தை கூடியதால், சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்து விட்டனர். குறிப்பாக மாலை 4 மணிக்கு மேல் சந்தை கூடிய பெரியகுளம் ரோட்டை கடந்து செல்வது என்பது கூட முடியாத காரியம் என்கிற அளவு நெரிசல் நிலவியது.

சந்தையில் அமைக்கப்பட்டிருந்த 350 கடைகளிலும் விற்பனை களைகட்டியது. காய்கறி முதல் பலசரக்கு, இரும்பு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என சந்தையில் கிடைக்காத பொருட்களே இல்லை என்று கூறலாம். எனவே அடுத்த சந்தை தீபாவளி முடிந்து இரண்டு நாள் கழித்து கூடும் என்பதால், வரும் தீபாவளிக்கு இந்த சந்தையில் பொருட்கள் விற்பனை வழக்கத்தை விட இருமடங்கு அதிகம் இருந்தது என வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags:    

Similar News