நாமக்கல்லில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு: மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை டிஆர்ஓ வழங்கினார்.

Update: 2021-10-19 02:30 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

கூட்டத்தில் கலந்துகொõண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, ரோடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 310 மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக் கொண்ட டிஆர்ஓ அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நிகழ்ச்சியில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளில் திருநங்கைகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்களில், ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வேண்டி விண்ணப்பம் அளித்த 12 திருநங்கைகளுக்கு புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை டிஆர்ஓ வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேலு உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News