நாமக்கல் அருகே காரில் கடத்தப்பட்ட 1,350 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

நாமக்கல் அருகே காரில் கடத்தப்பட்ட 1,350 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-04-12 03:15 GMT

நாமக்கல் அருகே ரேசன் அரிசி கடத்தி வந்த, காரை போலீசார் பறிமுதல் செய்து, அதன் டிவைரை கைது செய்தனர்.

சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ அகிலன், நாமக்கல் துணை தாசில்தார் ஆனந்தன், ஆர்ஐ சியாம் சுந்தர் மற்றும் போலீசார் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சல் பிரிவு ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த வேனில் 50 கிலோ எடை கொண்ட 27 சாக்குப் பைகளில் சுமார் 1,350 கிலோ எடை கொண்ட ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காருடன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காரை ஓட்டி வந்த வரகூர் தாட்கோ காலனியை சேர்ந்த டிரைவர் ஜெகநாதன் (52) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேசன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து டிரைவர் ஜெகநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News