நாமக்கல் மாவட்டத்தில் 13-ம் தேதி ரேசன் கார்டு தாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 13-ம் தேதி ரேசன் கார்டு தாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2022-08-11 09:45 GMT

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 13ம் தேதி 8 தாலுகா அலுவலகங்களில் ரேசன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தின் மூலம், ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு, மொபைல் எண் பதிவு மற்றும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ள, பொது வினியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், ரேசன்கார்டுதாரர்கள் குறைதீர் நாள் முகாம், வரும் 13ம் தேதி, காலை 10 மணி முதல், பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுக்கா வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட தாலுகா வழங்கல் அலுவலர் தலைமையில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, ரேசன்கார்டு சம்பந்தமான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News