நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பெரியாரின் 48ம் ஆண்டு நினைவஞ்சலி

கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியாரின் நினைவஞ்சலியில் எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2021-12-24 04:45 GMT

நாமக்கல் மாவட்ட திமுக சார்பில் பெரியாரின் 48வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு, நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெடற்றது. மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் பெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். மாநில திமுக நிர்வாகிகள் மணிமாறன், ராணி, நகர பொறுப்பாளளர்கள் ராணாஆனந்த், பூபதி, டாக்டர் மாயன், திமுக பிரமுகர்கள் பழனிவேல், முரளி, ரவீந்திரன், பாண்டியன், சரவணன், ஈஸ்வரன், துரைராமசாமி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News