பரமத்தி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Tamil Crime News- பரமத்தி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Tamil Crime News- பரமத்தி அருகே உள்ள மேட்டுப்பாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் செங்கோட்டுவேலு (53). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குப்பாயி. செங்கோட்டுவேலு கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனை குப்பாயி கண்டித்துள்ளார். கடந்த 25-ந் தேதி மாவுரெட்டி பகுதியில் செங்கோட்டுவேலு விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். அதைக்கண்டவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செங்கோட்டுவேலு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2