நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.1.40 கோடி மதிப்பில் பருத்தி ஏலம்

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.1.40 கோடி மதிப்பில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

Update: 2022-06-29 02:45 GMT

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் (என்.சி.எம்.எஸ்) வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு நாமக்கல், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், பரமத்தி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 4,300 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். திருச்செங்கோடு, கொங்காணாபுரம், ஈரோடு, அவிநாசி, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொõள்முதல் செய்தனர்.

ஆர்.சி.எ.ச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6,269 முதல் ரூ.9,460 வரையிலும், டி.சி.எச். ரக பருத்தி ரூ. 9,003 முதல் ரூ.9,900 வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ. 9,069 முதல் ரூ.9,500 வரையிலும், கொட்டு ரக பருத்தி ரூ.3,999 முதல் ரூ.7,399 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.1.40 கோடி மதிப்பிலான பருத்தி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News