மது குடிப்பதை கண்டித்ததால் விரக்தி: மேஸ்திரி தற்கொலை

Latest Suicide News -மது குடிப்பதைக் கண்டித்ததால், விரக்தியடைந்த கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-15 02:15 GMT

பைல் படம்.

Latest Suicide News - நாமக்கல் அருகே உள்ள கூலிப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் பிரதாப் (26). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது குடும்பத்தில் இருந்தவர்கள் கண்டித்துள்ளனர். சம்பவத்தன்று மோகனூர் காவிரி ஆற்றுக்கு சென்று விட்டு, குடிபோதையில் வீடு திரும்பிய பிரதாப், வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டுக் கொண்டார். அதைக்கண்ட அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதாப் உயிரிழந்தார். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News