சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர் கூட்டம் நடத்த கோரிக்கை

நாமக்கல் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலச்சங்க பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.

Update: 2022-08-10 02:15 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலச்சங்க பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்கத் தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 2019ம் ஆண்டு முதல் சுந்ததிர போராட்ட வீரர்களன் குறைதீர் கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது. மாவட்ட கலெக்டர் சுதந்திர போராட்ட வீரர்கள் குடும்பங்களை அழைத்து குறைகளைக் கேட்டு தீர்வுகாண நடவடிøக்கை எடுக்க வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மனுக்களை அளிக்கும்போது அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்திரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகி அவினாசிலிங்கம் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News