நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் பருத்தி ஏலம்

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது

Update: 2021-10-20 02:45 GMT

ஏலத்தில் அடுக்கி வைக்கப்பட்டடுள்ள பருத்தி மூட்டைகள். 

நாமக்கல்-திருச்செங்கோடு ரோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டியில் (என்சிஎம்எஸ்) செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு, நாமக்கல், சேந்தமங்கலம், புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, வேலகவுண்டம்பட்டி, எருமப்பட்டி, பவித்திரம், வரகூர் போன்ற பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 450 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

திருச்செங்கோடு, கொங்கானபுரம், ஈரோடு, அவினாசி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,411 முதல் ரூ.8,640 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7, 798 முதல் ரூ.8,911 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,799 முதல் ரூ.4,805 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.10 லட்ச மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.

Tags:    

Similar News